வட மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் மணமகன் குட்கா மென்ற காரணத்திற்காக அவரை மணமேடையிலேயே கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணமேடையில் மணமகனும், மணமகளும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது மணமகள் அருகே அமர்ந்திருப்பவரை திடீரென கோபத்தோடு அடிக்கிறார்.
அப்போது, தடுக்க முயன்ற மணமகனையும் அவர் அடிக்கிறார். பின்னர் மணமகன் எழுந்து சென்று வாயிலிருந்து எதையோ துப்பி விட்டு மீண்டும் வந்து அமர்கிறார்.
மணமேடையில் இருந்தபோது குட்கா மென்று கொண்டிருந்ததால் தான் மணமகனை அவர் அடித்துள்ளார். அதனால் மணப்பெண்ணை யாரும் தடுக்கவில்லை. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மணமகனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மணமகளின் செயலுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.