Home கிரைம் நியூஸ் அதிர்ச்சி: காட்டில் தூக்கில் தொங்கிய அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

அதிர்ச்சி: காட்டில் தூக்கில் தொங்கிய அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!

susaid
susaid

தூக்கில் தொங்கியபடி காட்டில் அழுகிய ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காயல்பட்டினம் சுடுகாட்டின் அருகே சீமை உடை மரக்கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் ஒன்று இருந்துள்ளது.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் மரத்தில் பிணமாக தொங்கிய ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. மேலும் உடலை மரத்தில் தூக்கி மாட்டி 5 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அழுகிய நிலையில் உடல் இருந்ததால் பிணத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version