Home அடடே... அப்படியா? இந்த மாவட்டப் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

இந்த மாவட்டப் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை முதற்கட்ட வாக்குப்பதிவும் 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றோடு முடிவடைந்துவிட்டன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்களுக்கு
விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். எனவே 5, 6 மற்றும் 8, 9 ஆகிய நாட்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7ஆம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version