spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆலயங்கள்பழனியில் நடந்த திருக்கல்யாண வைபவம்!

பழனியில் நடந்த திருக்கல்யாண வைபவம்!

- Advertisement -
pazhni
pazhni

சூரர்களை வதம் செய்து வெற்றிவாகை சூடிய முருகனுக்கு தெய்வானையை மணம்முடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் பழனி மலைக்கோவிலில் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அசுரர்களை அழித்து போரில் வெற்றிபெற்ற சண்முகருக்கு தெய்வானையை மணமுடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மலைக்கோவில் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் அருள்மிகு சண்முகர்-வள்ளி,தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக அருள்மிகு சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழா நாளான இன்றுடன் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன்,உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கூட்டமின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe