January 18, 2025, 6:20 AM
23.7 C
Chennai

13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கையை மோடி வலியுறுத்த வேண்டும்: பாரிவேந்தர்

சென்னை: 13வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இலங்கையை மோடி வலியுறுத்த வேண்டும் என்று பாரிவேந்தர் அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை (13 -ம் தேதி) நல்லுறவு பயணமாக பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் இலங்கைக்கு செல்ல உள்ளார். இப்பயணத்தின் போது, இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வழிவகுக்கும்,  இலங்கையின் 13 – வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்த இந்திய பிரதமர் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழர்களின் பெரும் பகுதிகளை இலங்கை ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது. எனவே தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் வட – கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை ராணுவம் மற்றும் சிறப்பு காவல் படையை உடனே திரும்பப்பெறவேண்டுமெனவும், தமிழர்களின் நிலப்பரப்புக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவேண்டும் எனவும் இலங்கை அரசை இந்திய பிரதமர் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பெருமளவில் வாழும் நிலப்பரப்பில் சிங்களர்கள் அத்துமீறி குடியேறுவதை உடனே தடுத்து நிறுத்த இலங்கை அதிபரிடம் பேசவேண்டும். இலங்கையின் உள்நாட்டு போரின்போது “மனித உரிமை மீறல்” மற்றும் தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்தியதின்மூலம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும், செத்து மடிந்தனர். இலங்கையில் நடந்தது ”இனப்படுகொலைதான்” என்பதனை வலியுறுத்தும் விதமாக ஐநா சபை அமைத்துள்ள பன்னாட்டு விசாரணைக் குழுவிற்கு இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளித்து, போர் சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் அவர்களுக்கு தரவேண்டும் என இந்திய பிரதமர் இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலில் மீன் பிடிக்கும்போது “எல்லை தாண்டி வந்தார்கள்” என்ற காரணத்தைக் கூறி தமிழக மீனவர்களை சிறை பிடித்தும், அவர்கள் மீது பொய்யான வழக்குகளை புனைந்தும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தும் இலங்கை ராணுவத்தின் மனித தன்மையற்ற செயலை உடனடியாக இலங்கை அரசு கைவிடவேண்டும் எனவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கில் கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியாவிற்கு இலங்கை கொடுக்க வழிவகை செய்யும் சட்டதிருத்தம் அல்லது புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை