― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஜிமெயிலை தாக்கும் மால்வேர்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஜிமெயிலை தாக்கும் மால்வேர்: எச்சரிக்கும் நிபுணர்கள்!

- Advertisement -

இணைய உலகில் புதிய மால்வேர் வலம் வருகிறது. இது உங்கள் சமூக வலைதளங்களை குறித்து வைத்து தாக்குகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

எப்போதுமே மால்வேர் என்றால், அது தர்ட் பார்டி சாஃப்ட்வேர் அல்லது ஆப் மூலமாக நடைபெறும் என்பதே பரவலான கருத்து. ஆனால், இந்த மால்வேர் என்பது உலகெங்கிலும் எண்ணற்ற யூசர்கள் பயன்படுத்தி வரும் மைக்ரோசாஃப் ஆப் உள்ளேயே ஊடுருவி வருகிறது.

இந்த மால்வேர் உங்கள் டிவைசுக்குள் எப்படி நுழைகிறது, எப்படி தாக்குதலை தொடுக்கிறது என்பது குறித்து தற்போதைய ஆய்வு முடிவுகள் தெளிவாக குறிப்பிடுகின்றன.

அதேசமயம், டெம்பிள் ரன் மற்றும் சப்வே சர்ஃபர் போன்ற ஆப்களிலும் இந்த மால்வேர் ஊடுருவி வருவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த இரண்டு ஆப்களுமே மிக பரவலாக பயன்படுத்தும் கேம் ஆப்கள் ஆகும்.

வாழ்வில் ஒருமுறையேனும் இதை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும் அல்லது குறைந்தபட்சம் அதுகுறித்து கேள்வி பட்டிருப்பீர்கள்.

உங்கள் டிவைஸ் மால்வேர் மூலமாக பாதிக்கப்பட்டால், அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களை அது கட்டுக்குள் கொண்டு வரும் என்ற எச்சரிக்கை தான், நாம் அதுகுறித்து அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை குறித்து உணர்த்துகிறது.

தற்போது கவலைக்குரிய விஷயம் என்ன என்றால், உலகெங்கிலும் உள்ள 5,000 டிவைஸ்களை இது ஏற்கனவே தாக்கிவிட்டது என்பதுதான். சிஸ்டம் மட்டுமல்லாது ஃபேஸ்புக், கூகுள் ஆகிய அக்கவுண்ட் மீதுதான் இது குறி வைத்து தாக்குதல் நடத்துகிறது.

இந்த மால்வேர் தாக்கினால், உங்கள் அக்கவுண்ட் உள்ளே தானாக அது லாகின் ஆகி, பிறரது பதிவுகளுக்கு லைக் அல்லது வேறு ரியாக்‌ஷன் கொடுக்க தொடங்குகிறது. குறிப்பாக, ஜிமெயில் மீது தாக்குதல் நடத்தி, அதில் உள்ள காண்டாக்ட்களை இது அழித்து விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மைக்ரோசாஃப் நிறுவனம் தடுக்குமா

மால்வேர் குறித்து ஆய்வு நடத்திய நிறுவனம், அதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப் ஆப் ஸ்டோரில் இது ‘ஆல்பம் பை கூகுள் ஃபோட்டோஸ்’ என்ற பெயரில் ஒளிந்திருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

இதையடுத்து, இந்த மால்வேரை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய சூழலில், அன்நோன் சோர்ஸ்களில் இருந்து எந்தவொரு அட்டாச்மெண்ட் மற்றும் ஆப்ஸ் போன்றவற்றை யூசர்கள் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

யூசர்கள் தங்களை அறியாமலேயே மால்வேர் கொண்ட சோர்ஸ் மீது நம்பிக்கை கொண்டு பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களது சிஸ்டம்களை இது பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, யூசர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version