
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் ( OTR ) ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்கள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை ஜனவரி 28-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மார்ச் 23-ம் தேதியுடன் முடிவடைவதால், அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.
ஏற்கனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்பது குறிப்பிடதக்கது.