அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் வடமாடு விழா நடந்தது.பழங்கால வீரவிளையாட்டுகளில் ஒன்றான மாடுகளை கட்டி அதைவீரர்கள் அடக்கும் வடமாடுவிழா 51ம் ஆண்டாக அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராமத்தில் நடந்தது இதில் புதுக்கோட்டை தஞ்சை சிவகங்கை ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த மாடுகளும் வீரர்களும் கலந்துகொண்டனர் ஒரு மாட்டினை அடக்கினால் ரூ.5 ஆயிரம் கிராமத்தார்களால் பரிசு வழங்கப்பட்டது இதில் 12 மாடுகளும் 108 மாடுபிடிவீரர்களும் கலந்துகொண்டனர் விழாவை முன்னிட்ட மருத்துத்துறை கால்நடைபராமரிப்புத்துறை தீயணைப்புத்துறை தயார் நிலையில் இருந்தது அறந்தாங்கி டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி இன்ஸ்பெக்டர்பாலமுருகன்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் பல ஆயிரம் பேர் வீர விளையாட்டை கண்டுரசித்தனர்.