திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே.கீரனூர், கள்ளி மந்தயம் பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
மூன்று முறை ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகளில் ஓடுகள் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் மக்கள் தஞ்சம் புகுந்ததாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.