பைக்கில் டெல்லியில் இருந்து குமரி வந்த எல்லை பாதுகாப்பு படை பெண்கள்…

Published:

images 2022 03 28T105253.736 - 2026

எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் குழுவின் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் சாதனையை  வெளிப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை சாகச மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் பெண்கள் குழுவினரின் “பி.எஸ்.எப். சீமா பவானி சவுர்யா சாகச மோட்டார் சைக்கிள் பயணம்-2022” என்ற பெயரில் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி உலக மகளிர் தினமான கடந்த 8-ந்தேதி டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது.  
இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மனைவிகள் நலச்சங்கத்தின் தலைவர் நுபுர் சிங் எல்லை பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் பங்கஜ் குமார் சிங் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் 39 பேர் இடம் பெற்று இருந்தனர். 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

டெல்லியில் இருந்து புறப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் பேரணி சண்டிகர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தது. பின்னர் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்தது.

வழியில் பள்ளிக் குழந்தைகள், என்.சி.சி. தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களுடன் உரையாடினர். இவர்கள் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 280 கிலோ மீட்டர் தூரத்தை 18 நாட்களில் கடந்து வந்து சாதனை புரிந்துஉள்ளனர். அவர்களுக்கு  விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ஏக்நாத் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. 

இதில் திருவனந்தபுரம் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி.பேபி ஜோசப் கலந்து கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற 39 எல்லை பாதுகாப்பு படை பெண்கள் குழுவினை சேர்ந்த பெண்களுக்கு பதக்கங்கள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். 

Related articles

Recent articles

spot_img