― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பிப்ரவரி: பத்து லட்சம் பயனர்களின் வாட்ஸ்அப்கள் முடக்கம்!

பிப்ரவரி: பத்து லட்சம் பயனர்களின் வாட்ஸ்அப்கள் முடக்கம்!

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகளவு வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதித்து வருகிறது இன்ஸ்டன்ட் மேசேஜிங் தளமான வாட்ஸ்அப்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் லட்ச கணக்கிலான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் காரணமாக வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது புதிய சட்ட விதிகளுக்கு புறம்பாக போலி செய்திகளை அனுப்பியது, மற்ற பயனர்களுக்கு தொல்லை கொடுப்பது மற்றும் இன்னும் பிற தவறான காணரங்களுக்காக அந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பயனர்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கொடுத்த புகார்கள் அடிப்படையிலும், விதிகளை மீறியவர்கள் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் இதற்காக Abuse Detection Technology என்ற தொழில்நுட்பத்தை
கட்டமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், , ஆடியோ உரையாடல்களை மேற்கொள்ளலாம்.

பின்பு இதில் முக்கியமான டாக்குமெண்ட்ஸ், போட்டோவையும், ஃபைல்களையும் எளிமையாக அனுப்ப முடியும்.

இருந்தபோதிலும் ஒரு ஃபைல் குறிப்பிட்ட அளவுக்குள் (size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். பின்பு இதன் காரணமாக வேறு சிலஅப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்புவதுண்டு.

மேலும் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரை அளவுள்ள ஃபைல்களை பயனர்கள் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதற்கான சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த வசதி முதற்கட்டமாக ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிகிறது.

அதன்பின்பு தான் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தகக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version