― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?மணமேடையிலேயே மணமகன் மடியில் விழுந்து மணமகள் மரணம்!

மணமேடையிலேயே மணமகன் மடியில் விழுந்து மணமகள் மரணம்!

- Advertisement -

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரவாடா தெலுங்கு தேச கட்சியின் இளைஞரணி தலைவர் சிவாஜி – சுஜனா திருமணம், கடந்த புதன்கிழமை இரவு 11 மணிக்கு நடைபெற இருந்தது.

இதற்காக முன்கூட்டியே திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து திருமண சடங்குகளும் நடைபெற்றது.

அப்போது மணமேடையில் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி, மணமகள் தலையில் சீரகம் வெல்லம் வைத்து நூறு ஆண்டுகள் மணமக்கள் சீருடனும் சிறப்புடனும் வாழ வேண்டும் என புரோகிதர் வேத மந்திரங்கள் முழுங்க சடங்குகள் செய்து கொண்டுருந்தார்.

அப்போது மணமகள் சுஜனா திடீரென சுயநினைவை இழந்து மணமகன் மடியிலேயே சரிந்தார். இதைக்கண்ட பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மணமகள் சுஜனா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மணமகன் மற்றும் மணமகள் குடும்பங்களிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மாரடைப்பில் மணமகள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் விஷம் அருந்தியதால் மணமகள் இறந்தது தெரியவந்தது.

எதற்காக அவர் விஷம் குடித்தார்? காதல் தோல்வியா அல்லது விருப்பம் இல்லாத திருமணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்திவருவதாக போலீசர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version