― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்வைகாசி மாதம் பிறந்தவர்கள் குணநலன்கள்..!

வைகாசி மாதம் பிறந்தவர்கள் குணநலன்கள்..!

- Advertisement -
astrology

சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என கருதப்படுகிறது.

நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி மாதமாகும்.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபகசக்தி இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு யோசனைகள் சொல்வதில் வல்லவர்கள்.

இவர்களின் பலமே பொறுமை தான். இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை எளிதாக அடையாளம் காண்பவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு இயற்கையிலேயே வசீகரத் தோற்றம் அமைந்து இருக்கும். ஆடம்பரமாக வாழ்வதை விரும்புவார்கள். பெண்களிடம் நயமும், நளினமும் கலந்திருக்கும். இவர்கள் இன்பம், துன்பம், நிறைகுறை போன்றவற்றை சமமாக பாவிப்பார்கள்.

இவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக தெரிந்து கொள்ள நினைப்பார்கள். மனதில் வருத்தம், கோபம் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

குடும்பத்தில் இவர்கள் முக்கியமானவராக இருப்பார்கள். உற்றார், உறவினர், உடன்பிறப்பு எல்லோரையும் அனுசரித்துச் செல்வார்கள். சில விஷயங்களில் பிடிவாதமாக இருந்து சாதிப்பார்கள். குற்றம், குறைகளை சரியான நேரத்தில் சுட்டிக் காட்ட தயங்கமாட்டார்கள்.

இவர்கள் கையில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். தங்களின் சுய தேவைக்கும், ஆசைக்கும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயங்கமாட்டார்கள்.

தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகியவற்றில் நிர்வாகத் திறமையும், சமயோசித புக்தியும், யுக்தியும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

பல்துறை வித்தகர்களாகவும், கலைத்துறையில் சாதனை புரியும் யோகமும் உண்டு. சிறந்த பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், பதிப்பகங்களை நடத்துபவராகவும், அச்சகத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். சுற்றுலாக்கள், புனித ஸ்தலங்களுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். உல்லாசப் பயணங்களிலும் விருப்பம் உடையவர்கள்.

தனிமையை விரும்புபவர்கள், இயற்கையை, கலையை, அழகை ஆராதிப்பவர்கள். தங்களின் பயண அனுபவங்களை மிகுந்த ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

இவர்களுக்கு உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் அடிக்கடி உண்டாகும். ரத்த சம்பந்தமான குறைபாடுகள் இருக்கும். சைனஸ், தும்மல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். வயது ஏறஏற ஞாபகமறதி நோய் வர வாய்புக்கள் உண்டு. நரம்புத் தளர்ச்சி பிரச்சனையும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இவர்களுக்கு நல்ல ஆற்றலும், நிர்வாகத் திறமையும் உள்ள பெண் / ஆண் வாழ்க்கைத் துணையாக வருவார்கள். சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

புதன், செவ்வாய், சுக்கிரன் அனுகூலமாய் இருக்கப் பிறந்தவர்கள், மனைவி மூலம் பல யோக, போக, சுக பாக்கியங்களை அனுபவிப்பார்கள். ஒரு சிலருக்கு உயர்ந்த பதவி, புகழ், செல்வம், செல்வாக்குள்ள மனைவி அமைவதற்கான யோகமும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version