சரியான முறையில் ஹெல்மெட் அணியவில்லை என்றாலும், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..
இந்தியாவில் ஹெல்மெட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த அபராதத்திற்கு பயந்து பெரும்பாலான மக்கள் தரமற்ற மற்றும் விலை மலிவான ஹெல்மெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் விபத்து ஏற்படும் பட்சத்தில் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கூட, தலையில் ஆழமான காயம் ஏற்படுவதால் உயிரிழப்பு என்பது தவிர்க்க முடியாததாக மாறுகிறது.
இந்நிலையில் சரியான முறையில் ஹெல்மெட் அணியவில்லை என்றாலும், ஹெல்மெட் அணிவதற்கான விதிகளை மீறினாலும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் ரூ. 2,000 விதிக்கப்பட உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறுவதைக் கட்டுப்படுத்தவும், சாலை விபத்து இறப்புகளைக் குறைக்கவும், 1998 மோட்டார் வாகனச் சட்டத்தின் இந்த புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் இவை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது
எந்தெந்த சூழ்நிலைகளில் ₹2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்:
நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை ஓட்டும் போது ஹெல்மெட்டின் ஸ்ட்ரைப் அவிழ்க்கப்பட்டிருந்தால், ₹1,000 அபராதம் செலுத்த வேண்டும்.
உங்கள் ஹெல்மெட்டுக்கு BSI (Bureau of Indian Standards) சான்றிதழ் இல்லை என்றால், உங்களிடம் ₹1,000 அபராதம் விதிக்கப்படலாம்.
சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது போன்ற பிற போக்குவரத்து விதிகளை மீறினால், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும்.
வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால், ரூ. 20,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
இரு சக்கர வாகன ஹெல்மட்களின் தரத்தையும் மேம்படுத்தவும், சாலை பாதுகாப்பு சூழ்நிலையை மேம்படுத்தவும், இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஆபத்தான காயங்களை குறைக்கவும் இது மேலும் உதவியாக இருக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.