தனது உருவத்தை பண்டையத் தமிழ் எழுத்துகள் மூலம் வரைந்த தமிழக கலைஞரை தமிழில் பாராட்டியுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.
66 வயதாகும் ஆனந்த் மகிந்திரா சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது கவனத்திற்கு புதுமையான விஷயம் வந்தால் உடனே அதை வெளியுலகிற்கு கொண்டு வந்து அதை பாராட்டிவிடுவார்.
ஆனந்த் மகிந்திராவுக்கு பாலோயர்ஸ்கள் அதிகம். அந்த வகையில் ஆனந்த் மகிந்திராவின் உருவத்தை தமிழ் எழுத்துகளால் வரைந்துள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். 741 பண்டைய தமிழ் எழுத்துகள் மூலம் இந்த படத்தை வரைந்துள்ளார். இது போல் வரைவது இதுதான் முதல்முறை என கூறி வீடியோவை பதிவிட்டுள்ள கணேஷ், உங்களின் ஆலோசனையை கேட்க ஆவலாக உள்ளேன் என ஆங்கிலத்தில் பதிவு போட்டிருந்தார்.
இதற்கு ஆனந்த் மகிந்திரா தமிழில் பதில் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் ஆஹா என் உருவப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது. நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
கணேஷ் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் ஆனந்த் மஹிந்திரா ஓவியத்தை வரையும் போது எடுத்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
மேலும் பதிவில் ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா ரேசிங், மஹிந்திரா எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா ரைஸ் போன்ற அக்கவுண்ட்களை டேக் செய்து இருந்தார். இதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ்-க்கு வெகுவாக பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
கணேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பலர் இவரின் முயற்சிக்கு தங்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனந்த் மகிந்திரா நிறைய பேரது தனித்துவமான சாதனைகளை கண்டறிந்து பாராட்டுகளையும் வெகுமதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
— anand mahindra (@anandmahindra) May 23, 2022
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.. https://t.co/9nAyMAlUAK