― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஜூன் 21 முதல் ஸ்ரீ ராமாயண யாத்ரா..!

ஜூன் 21 முதல் ஸ்ரீ ராமாயண யாத்ரா..!

- Advertisement -
Ramayan yatra

இந்திய ரயில்வே சார்பாக ஜூன் 21 முதல் “ஸ்ரீ ராமாயண யாத்ரா” ரயில் சேவை தொடங்க இருக்கிறது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) 18 நாள் ஸ்ரீ ராமாயண யாத்திரையை ஜூன் 21ஆம் தேதி சிறப்பு சுற்றுலா ரயிலுடன் துவங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐஆர்சிடிசி, லக்னோவின் முதன்மை மண்டல மேலாளர் அஜித்குமார் சின்ஹா ​​செய்தியாளர்களிடம் பேசியதாவது “ஜூன் 21ம் தேதி தில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ராமாயண சர்க்யூட்டின் “பாரத் கவுரவ் டூரிஸ்ட் ரயில்” பயணத்திற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளது.

சுமார் 600 பயணிகள் தங்கும் வசதியுடன் 11 மூன்றாம் ஏசிவகுப்பு பெட்டிகளைக் உடைய ரயிலில் 18 நாள் பயணத்திற்கு 1 பயணிக்கு ரூபாய் 62,370 செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமர், அவரது மனைவி சீதா தேவி மற்றும் லக்ஷ்மணன் போன்றோர் 14 வருடங்கள் காட்டில் வனவாசம் செய்துகொண்டு காலடி எடுத்து வைத்த பக்தர்களின் கனவுகளை நனவாக்கும் அடிப்படையில் இச்சுற்றுலா தொகுப்பு இருக்கிறது என சின்ஹா ​​கூறினார்.

அயோத்தி, ஜனக்பூர் (நேபாளம்), சீதாமர்ஹி, பக்சர், வாரணாசி, பிரயாக்ராஜ், ஷிரிங்வெர்பூர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராசலம் ஆகிய முக்கியமான இடங்களை உள்ளடக்கிய ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்ட ராமாயண சுற்றுவட்டத்தில் இந்த ரயில் இயக்கப்படும்.

இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா ரயில் ஒன்று சென்று அயோத்தி மற்றும் ஜனக்பூர் போன்ற 2 மத நகரங்களை இணைப்பது முதல் முறையாகும் என சின்ஹா ​​தெரிவித்தார்.

மேலும் தில்லியைத் தவிர அலிகார், துண்ட்லா, கான்பூர் மற்றும் லக்னோ போர்டிங் பாயின்ட்டுகள், ரயில் நிலைய பயணிகள் பலகைகளைப் பொருட்படுத்தாமல் டிக்கெட்டின் விலையானது ஒரே மாதிரியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

இந்த பயணத்திட்டத்தில் உணவு, ஹோட்டலில் தங்குதல் மற்றும் வருகை தரும் இடங்களில் வழிகாட்டும் சேவைகள் போன்றவை அடங்கும் என சின்ஹா ​​கூறினார்.

ஏறத்தாழ 8,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 18 வது நாளில் டெல்லிக்கு திரும்பும் பாரத் கவுரவ் டூரிஸ்ட் ரயிலின் உட்புறங்கள் ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்பே 285 முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 61 முன்பதிவுகள் மகாராஷ்டிராவிலிருந்தும், 55 உத்தரபிரதேசத்திலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சின்ஹா ​​கூறினார்.

இதனிடையில் ஐஆர்சிடிசி ஆனது பயணிகளுக்கு EMI விருப்பங்களை வழங்குவதற்காக பேடிஎம் மற்றும் ரேசார்பே கட்டண நிறுவனங்களுடன் இணைந்து இருக்கிறது.

மேலும் முதல் 50 சதவீத பயணிகளுக்கு 5% பயணக்கட்டண சலுகை வழங்கப்படும். ஐஆர்சிடிசி வழங்கிய EMI கட்டண விருப்பமும் முதல் முறையாகும் என சின்ஹா ​​தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version