அந்தமான் நிகோபர் தீவின் திக்லிபூர் நகரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் தெற்கு-தென்கிழக்கு பகுதியில் இன்று காலை 7.50 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 32 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
