தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரும்,அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தேர்வானார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் 7 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் தேர்தல் அதிகாரி சீனிவாசன்
