தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
200 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை நடந்ததில் கொரோனா உறுதியான, 30 பேருக்கு விடுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவலால் உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பால் இதுவரை 54.82 கோடி பேருக்கு தொற்று உறுதியானது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 548,205,470 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 548,205,470 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 523,148,790 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 6,349,360 பேர் உயிரிழந்து உள்ளனர்.