January 18, 2025, 5:04 AM
24.9 C
Chennai

ஐதராபாத்தில் இன்று தொடங்கிய பாஜக தேசிய செயற்குழு கூட்டம்..

2022 ஆம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கூட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையின் கீழ் 8 ஆண்டுகள் ஆட்சி நிறையும் தருவாயில் இன்னும் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தை பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

19 மாநில பா.ஜ., ஆளும் முதல்வர்கள், மூத்த தலைவர்களான அமித்ஷா, நிதின்கட்காரி ,வசுந்த்ரா ராஜே, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். நாளை (ஜூன்-3) நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கவும், அங்கு எற்பட்டுள்ள ஊழல் நிலையை மக்களுக்கு தெரிவிக்கவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகிகளுக்கு தெலுங்கானாவில் புகழ் பெற்ற முத்து மாலை அணிவிக்கப்பட்டது. தலைவர்கள் வரும் போதும் பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்றனர். நடிகை குஷ்பு அங்கு நடந்த பாரம்பரிய தெலுங்கானா கலாசார கலைஞர்களுடன் கோலாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடினார்

கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் தேசிய அளவிலான பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் செயற்குழுவில் பங்கேற்கிறார்கள். தமிழகம் சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு பங்கேற்றுள்ளனர். பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஐதராபாத் வந்து சேர்ந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார்.

ALSO READ:  திருப்பரங் குன்றத்தில் விநாயகர் கோயில் இடித்து அகற்றம்! போராடிய இந்து இயக்கத்தினர் கைது!

ஐதராபாத் வந்து இறங்கியதும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்க உள்ளதாக கூறி உள்ளார்.

மோடியை வரவேற்பை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர்..

ஹைதராபாத் நகரில் நடைபெறும் பாஜக தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் மோடிக்கு தெலங்கானா அரசு சார்பில் அம்மாநில அமைச்சர் ஒருவர் மட்டுமே சென்று வரவேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெறும் பாஜக தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஹைதராபாத் வருகை தந்தார். அவரை தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்கவில்லை.

மேலும் தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் ஒருவர் மட்டுமே சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். ஆனால் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் களம் இறக்கப்பட்டு இருக்கும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக ஹைதராபாத் சென்றார். அவரை முதலமைச்சர் சந்திர சேகர ராவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் சென்று வரவேற்றனர். இந்த நிகழ்வு தெலங்கானா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  யுஜிசி விவகாரம்; நீதிமன்றம் செல்வதே சரி என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை