April 27, 2025, 1:56 AM
29.6 C
Chennai

மாணவி ஸ்ரீமதி உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி (16). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து கடந்த 13-ந்தேதி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மாணவியின் பெற்றோர் ஏற்கவில்லை. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவர்கள் உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் கலவரமாக வெடித்தது. பள்ளி வளாகமே சூறையாடப்பட்டது. இதற்கிடையில், “தன் மகள் மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அதில் எங்கள் தரப்பு டாக்டரையும் இடம்பெற செய்ய வேண்டும்” என்று மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ALSO READ:  மதுரை பகுதியில் பங்குனி உத்ஸவ விழாக்கள்!

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று காலையில் உத்தரவு பிறப்பித்தார். அதில், மறுபிரேத பரிசோதனை செய்யும் குழுவில் மனுதாரர் தரப்பு டாக்டர்கள் இடம்பெறவில்லை என்பதால், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த அப்பீல் வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு ராமலிங்கம் தரப்பு வக்கீல் சங்கர்சுப்பு முறையிட்டார்.

ஆனால், இவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் அப்பீல் செய்ய வேண்டும். ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் அப்பீல் செய்ய முடியாது என்று கூறினர்.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தரப்பு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் மாணவியின் உடல் மறுகூறாய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என்றும், மறு உடல் கூறாய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க கோரி மாணவியின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிப்பதாகவும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் ஏன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தீர்கள்? ஐகோர்ட்டின் மீது நம்பிக்கை இல்லையா? நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவை குறை கூற வேண்டாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  ஜூன் 22ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; இந்து முன்னணி அழைப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories