மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,000 கனஅடி யாகஅதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசானமழை பெய்து வருவதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000கன அடியாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120அடியாகவும் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.
