April 28, 2025, 2:48 PM
32.9 C
Chennai

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் நகைகள் ஆய்வு..

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் நகைகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா விதிமுறைகளை காரணம் காட்டி சித்சபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி சித்சபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்கு பொது தீட்சிதர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே கோவிலில் உள்ள சொத்துக்கள், நகைகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு இந்து சமய அறநிலைதுறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் கோவில் தீட்சிதர்கள் இந்த ஆய்வு நீதிமன்ற விதிகளுக்கு எதிரானது என்று கூறி ஆவணங்களை கொடுக்க மறுத்துவிட்டனர்.

ALSO READ:  மதுரை - குருவாயூர் ரயிலில் பொதுப் பெட்டிகளை குறைப்பதற்கு பயணிகள் எதிர்ப்பு!

எனவே அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் நேரடியாகவும், இனையதளம் மூலமாகவும் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அறிவித்திருந்தார். அதன்படி கடலூரில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள், சொத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைத்தது. அதன்படி இந்த குழுவில் இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர்கள் ஜோதி , குமரேசன் , சிவலிங்கம் நகை மதிப்பீட்டு வல்லுனர்கள் தர்மராஜன் , குமார் , குருமூர்த்தி ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆய்வு செய்யும் விபரம் குறித்து ஏற்கனவே கோவிலில் உளள தீட்சிதர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்படி 6 பேர் கொண்ட குழுவினர் இன்று (22-ந் தேதி) ஆய்வு செய்வதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இந்த குழுவினர் இன்று காலை 10.30 மணி அளவில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அப்போது பொது தீட்சிதர்கள் அலுவலக அறையில் அதிகாரிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 21 படிக்கு அருகே உள்ள இடத்தில் தீட்சிதர்கள் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் கோவில் நகைகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. அப்போது வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதையொட்டி கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ALSO READ:  ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories