April 28, 2025, 8:05 AM
28.9 C
Chennai

சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு..

சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகளை வைத்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகளை வைத்து பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் மேகநாதன், தங்கராஜ், பாரத் இந்து முன்னணி சார்பில் பிரபு, டில்லிபாபு, அருண், விஸ்வ இந்து பரிசத் சார்பில் ரவிராஜ், இந்து மக்கள் கட்சி சார்பில் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் சார்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை விழா கமிட்டியினர் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது பகுதியைச் சேர்ந்த இந்து இயக்க பிரமுகர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 10 இடங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 31-ந்தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை 4-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளையும் போலீசார் வகுத்துள்ளனர். இதனை முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மாநகர போலீசார் விரிவான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளனர்.

ALSO READ:  IPL 2025: ரோஹித் அதிரடியில் கைகொடுக்க மும்பை வெற்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories