

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைப்பகுதியில் அளவுக்கு அதிகமாக பக்தர்கள் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் காரணமாக இன்று 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் . இந்த கோயிலானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது .மேலும் சதுரகிரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோயிலுக்கு மாதந்தோரும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சகரகிரி கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம், மஹாளய அமாவாசை முன்னிட்டும்,நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும் கடந்த 23 ஆம் தேதிமுதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.
இன்று மகாளய அமாவாசை என்பதன் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வந்தனர்
மேலும் மலைப் பகுதிக்குள் மலையேறி சென்று கொண்டிருக்கும் போது கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன் ஆகிய இரண்டு பேர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிகளவில் கூட்டம் வந்ததால் இந்த உயிர் இழப்பானது நடந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்
