பெங்களூரு -மதுரை-தென்காசி-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

images 2022 09 15T130403.149 1 - 2026

பெங்களூருவில் இருந்து தமிழகத்தில் தென் மாவட்டங்களான செங்கோட்டை திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி க்கு இயக்கப்படும் பஸ்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதால் பெங்களூரு -மதுரை-தென்காசி-திருநெல்வேலி இடையே ஆயுதபூஜை முதல் தீபாவளி வரை வாரம் இருநாள் சிறப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் வழியாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை திருச்செந்துார் நாகர்கோவில் திருவனந்தபுரம் வழித்தடத்தில் தலா 28 பஸ்கள் இரண்டு மார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன.

அதுபோல 17 பஸ்கள் சேலம் நாமக்கல் கரூர் வழியாக திருச்சி ராமநாதபுரம் சிவகங்கை தேனி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.வரும் அக். 4 சரஸ்வதி பூஜை அக். 24 தீபாவளி பண்டிகைக்கான எஸ்.இ.டி.சி. பஸ்களின் முன்பதிவு நேற்று முன்தினம் துவங்கியது. அனைத்து டிக்கெட்டுகளும் பெங்களூருவிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.இதனால் நேற்று ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் இன்று பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்ற பயணியர் முன்பதிவு முடிந்து விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதே நேரத்தில் சிறப்பு பஸ்களின் இயக்கத்துக்கு அதிகாரிகள் சென்னைக்கே முக்கியத்துவம் அளித்து இந்த வழித்தடத்தில் இயங்கிய பஸ்களில் 25 சதவீதத்தை சென்னைக்கு திருப்பி விட்டுள்ளனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

எஸ்.இ.டி.சி. பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்து விட்டதால் மதுரை சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெங்களூரு-திருநெல்வேலி இடையே மதுரை விருதுநகர் தென்காசி வழியில் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஆயுதபூஜை க்கு முன்னதாகவும் தீபாவளி முடியும் வரையிலும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img