February 11, 2025, 6:26 PM
27.5 C
Chennai

சென்னை -செங்கோட்டை -சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை..

ஒரு வந்தே பாரத் ரெயில் தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரயிலை சென்னை -செங்கோட்டை -சென்னை இடையே எட்டு மணிநேரத்தில் செல்லும் வகையில் இயக்க தென்காசி விருதுநகர் மாவட்ட பொதுமக்கள் வர்த்தகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் அதிக வேகமாக ஓடக்கூடிய “வந்தே பாரத்” ரெயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரெயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதுவரையில் பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற் சாலையில் இருந்து 3 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. 2 ரெயில்கள் வடக்கு ரெயில்வேக்கும் 1 ரெயில் மேற்கு ரெயில்வேக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஐ.சி.எப்-ல் இருந்து 27 ரெயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு வந்தே பாரத் ரெயில் தற்போது தயாராக உள்ளது.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வேக்கு ஒரு வந்தே பாரத் ரெயிலை ரெயில்வே வாரியம் ஒதுக்கியுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு 16 பெட்டிகளை கொண்ட ஒரு வந்தே பாரத் ரெயில் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று இதுவரை இறுதி செய்யப்படவில்லை. பேசின் பாலம் ரெயில்வே பணிமனையில் இதற்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னைக்கு 5-வது அல்லது 6-வது வந்தே பாரத் ரெயில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர், அல்லது மதுரை அல்லது கோவை ஆகிய ஏதாவது ஒரு நகரத்திற்கு இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறிவரும் நிலையில் இந்த ரயிலை சென்னை-செங்கோட்டை-சென்னை இடையே பகல் இரவு ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இந்த வழியில் இயங்கும் பொதிகை , சிலம்பு,கொல்லம் விரைவு ரயில் எப்போதும் பயணிகளை முழுமையாக நிரப்பி செல்கிறது. குற்றாலம் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.ராஜபாளையம் சங்கரன்கோவில் சிவகாசி என மிகப்பெரிய தொழில் நகரங்களும் மதுரை சங்கரன்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி திருச்சி ஆன்மீக ஸ்தலங்களும் இந்த வழியில் உள்ளன.இதனால் துரிதமாக செல்லும் பயணிகள் வர்த்தகர்கள் மாணவர்கள் ஞ்சா சுற்றுலா செல்வோர் நலன் கருதி முக்கிய நகரங்களில் மிக குறைந்த நிறுத்தங்களுடன் செல்லும் வகையில் சென்னை -செங்கோட்டை-சென்னை இடையே பகல் இரவு ரயிலாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories