பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா கைது..

Published:

1773203 rocket raja - 2026

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் இந்த கொலை வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர் .

நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆணைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப்படை கட்சியின் நிறுவன தலைவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே இரு கொலை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நாங்குனேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சாமிதுரை என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

சாமிதுரையை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராக்கெட் ராஜாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img