தொடர் மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வத்றாயிருப்புக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு வரும் 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிரதோஷம் அமாவாசை வழிபாடு நடத்த பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். எனவே பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
