
விருதுநகர் அருகே சதானந்தபுத்தில் உள்ள பம்பு செட்டு கிணறு தோட்டத்தில் இன்று குளிக்க சென்ற தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சதானந்தபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (42) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் லோடுவேன் ஓட்டுனராக பணியாற்றி கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி சாந்தி, இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில்,
இவருடன் அதே பகுதியை சேர்த்த லோடுமேனாக
முனியசாமி என்பவரும் வேலை (50) செய்து வருகின்றனர்.
இவருக்கு கவிதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.
முனியசாமி, சீனிவாசனும், ஆகிய இருவரும் சதானந்தபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பம்பு செட்டு கிணற்று தோட்டத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது காட்டுப்பன்றிகளை தடுக்க போட்டுள்ள மின்வெளியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனையறிந்த அப்பகுதியினர் சீனிவாசன் குடும்பத்தினருக்கும், முனியசாமி குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் இருவரது உடலையும் பார்த்து கதறி அழுது, வச்சக்காரப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மோகன்ராஜ் சட்ட விரோதமாக தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாகவும், அதனால் அதில் சிக்கி சீனிவாசனும் முனியசாமியும் உயிரிழந்ததாகவும் அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.