வன்முறை பாடல்களை ஒலிபரப்பக்கூடாது – ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

images 22 - 2026

ரேடியோ சேனல்கள் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்தது. இதை மீறினால் அந்த ரேடியோ நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது.

மது, போதைப் பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் பாடல்களை ரேடியோ நிலையங்கள் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து உள்ளது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரேடியோ நிலையங்கள் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும். இந்த ஒப்பந்தங்களின்படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் ரேடியோவில் ஒலிபரப்பக் கூடாது. இதை மீறினால் அந்த ரேடியோ நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது. சில ரேடியோ சேனல்கள் மது, போதைப் பொருள், ஆயுதங்கள், கும்பல் மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் பாடல்களை ஒலிபரப்பு செய்வதை தொலைத்தொடர்பு அமைச்சகம் கண்டறிந்ததை அடுத்து இந்த அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img