More
    Homeசற்றுமுன்சிவகாசி மின்சாதன கடையில் தீ: போலீசார் விசாரணை

    To Read in other Indian Languages…

    சிவகாசி மின்சாதன கடையில் தீ: போலீசார் விசாரணை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  எலக்ட்ரிக் சாமான்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் ஏராளமான எலக்ட்ரிக் பொருள்கள் எரிந்து நாசமானது.

    சிவகாசி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காந்தி சாலையில் ரவி அருணாசலம் என்பவருக்கு சொந்தமான மின்சாதன பொருள்கள் விற்பனை கடை உள்ளது. இந்த கடை மூன்று தளங்கள் கொண்டதாகும்.

    இந்நிலையில் புதன்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றனர். தொடர்ந்து இன்று அதிகாலை  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளின் தீயணைப்பு படையினர் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதிக அறைகள் கொண்ட கட்டடம் என்பதால் தீயை அணைக்கும் பணி தாமதமானது என தீயணைப்படையினர் கூறினர். இந்தத் தீ விபத்தில் கடையிலிருந்த அனைத்து மின்சாதன பொருள்களும் தீயில் எரிந்து நாசமானது.

    தீயில் எரிந்து போன பொருள்களின் மதிப்பு கணக்கிடப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து நடைபெற்ற இடத்தை தீயணைப்பு துறை தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு அதிகாரி விவேகானந்தன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு சபரிநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    eleven − eight =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...

    Exit mobile version