Home சற்றுமுன் ஏப் 1முதல் ஹால்மார்க் இல்லாத நகை விற்க அனுமதி இல்லை..

ஏப் 1முதல் ஹால்மார்க் இல்லாத நகை விற்க அனுமதி இல்லை..

மார்ச் 31-க்குப் பின் ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை விற்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது.

ஹால்மார்க் முத்திரை பெற, தனித்துவமிக்க ஆறு இலக்க எண் ஒன்று ஒவ்வொரு நகை மீதும் பொறிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நகையை உருவாக்கிய நிறுவனம் மற்றும் ஹார்ல்மார்க் முத்திரை அளித்த மையம் எது என்பதை எளிதாக கண்டறிய முடியும். நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. சிறு, குறு நகை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஆகும் கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் 90 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மார்ச் 31-க்குப் பின் ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை விற்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் தங்க நகை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டு, நாடு முழுவதும் தங்க நகைகளின் தரத்தை ஒரே அளவில் இருக்கச் செய்யமுடியும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version