
17 வயது மனவளர்ச்சி குன்றிய இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியாருக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறையில் இருக்க மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
17 வயது மனவளர்ச்சி குன்றிய இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை பாதிரியாருக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறையில் இருக்க திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் ராஜா வயசு 49 இவர் சர்ச் ஒன்றின் பாதிரியார் ஆக இருந்து வருகிறார் இவர கடந்த 3/ 5/ 2022 அன்று சர்ச்சுக்கு வந்த 17 வயது மனநலம் குன்றிய இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர் மேலும் பாதிரியாரையும் கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு
திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் 17 வயது மனநலம் குன்றிய இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் ஜோசப் ராஜாவிற்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக் சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார் மேலும் பாதிரியாருக்கு 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார் பாலியல் தொல்லை வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் அதிரடியாக உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.