30-05-2023 12:55 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசற்றுமுன்ஏற்காட்டில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    ஏற்காட்டில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்..

    images 86 1

    விடுமுறை நாளான இன்று ஏற்காட்டில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

    தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. சேலம் உள்பட பல மாவட்டங்களில், 103 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

    வெயில் அதிகரிப்பு மற்றும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டம் எற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் காட்டேஜ், ஹோட்டல், விடுதிகளில் தங்கி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, மான் பூங்கா உள்ளிட்டவற்றை சுற்றிப்பார்த்து ரசிக்கின்றனர்.

    ஏற்காடு படகு இல்லம், சேர்வராயன் கோயில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ்சீட் போன்ற இடங்களுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று இன்று விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சாலையோர கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்ததால், சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    sixteen − 3 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,024FansLike
    389FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,749FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக