January 17, 2025, 6:42 AM
24 C
Chennai

+2தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் – பெற்று திண்டுக்கல் மாணவி சாதனை..

நந்தினி

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார், பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி. திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல் , வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து மொத்தமாக 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

நந்தினி கூறியதாவது; என் தந்தை கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். நான் வீட்டிலிருந்தே என்னுடைய தேர்வுக்கு பாடங்களை படித்து தயார் செய்தேன். அதுமட்டுமில்லாமல் எனக்கு என் அப்பா, அம்மா, பாட்டி உள்ளிட்ட அனைத்து உறவுகளும் ஊக்கம் கொடுத்தனர்.

என்னுடைய தமிழ் ஆசிரியர் அனுராதா எனக்கு இன்னொரு அம்மா போல் திகழ்ந்தார். எந்த சந்தேகம் எப்பொழுது ஏற்பட்டாலும் அதை தீர்த்து வைக்க சலிப்பு இல்லாமல் எனக்கு உதவி செய்வார். தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் வாழ்வில் சாதனைகளை படைக்கலாம்.

நான் ஆடிட்டர் படிப்பை படிக்க இருக்கிறேன். அதை என் தந்தை படிக்க வைக்க தயாராக இருக்கிறார். இந்த வெற்றியை நான் என் பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு நந்தினி கூறினார். இன்று காலை அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவி நந்தினிக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ALSO READ:  மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றிய காஷ்மீர் சட்டசபை!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!