ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு., மேலும் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
ஊட்டியில் இருந்து செங்கோட்டை நோக்கி அரசு பேருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. ஆடல் பாடல் குழுவினர் ராஜபாளையத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு 18 பேர் வேனில் மதுரை நோக்கி சென்றுள்ளனர்.இந்த நிலையில்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி லட்சுமியாபுரம் பகுதியில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த வேன் ஓட்டுநர் ஸ்ரீதர் (31) மற்றும் ரகு (24) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம்பட்டி காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட
இதில் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.