ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ வண்டு கடித்து விஏஓ உயிரிழப்பு..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

IMG 20230528 WA0141 - 2026
#இந்திராகாந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ வண்டு கடித்ததில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முல்லை நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் இந்திராகாந்தி(54) இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

முல்லை நகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என பார்ப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது இந்திரா காந்தியை விஷ வண்டு கடித்தது
இதையடுத்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இந்திராகாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img