விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்!

Published:

images 42 1 - 2026
#image_title

போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘ஜிஎஸ்எல்வி எஃப்-12’ ராக்கெட்.

தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பயன்பாட்டுக்காக ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ என்ற கட்டமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

images 41 - 2026
#image_title

அதன்படி, ரூ.1,420 கோடி செலவில் ஐஆா்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. அவற்றில் செயலிழந்த செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ‘ஐஆா்என்எஸ்எஸ் 1-ஜி’ செயற்கைக்கோளுக்கு மாற்றாக ‘என்விஎஸ்-01’ செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து திங்கள்கிழமை காலை 10.42 மணியளவில் ‘ஜிஎஸ்எல்வி எஃப்-12’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 

இதில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 6 ஆவது ஜிஎஸ்எஸ்வி ராக்கெட்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

‘என்விஎஸ்-01’ செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் திறன் கொண்டது.  கடல்சார் இருப்பிடம், பேரிடர் மேலாண்மை தகவல்களை வழங்கும்.
செல்போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு, நிதி, மின்துறை நிறுவனங்களுக்கு தரவுகளை பெறமுடியும். 

இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சோ்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடா் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விண்ணில் ஏவப்பட்ட என்விஎஸ்-01 செயற்கைகோள், அதன் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img