
சிவகாசி அருகே இடி மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் சேவுகன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ வேல் பட்டாசு செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாள் என்பதால் ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவில் இடி மின்னலினால் வெடி விபத்து ஏற்பட்டது.

ஆலையின் நுழைவாயிலின் அருகே இருந்த அறை இடிந்து தரை மட்டமானது. சம்பவம் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.