சபரிமலையில் ஆனி மாத பூஜை வழிபாடு இன்று துவக்கம்.‌

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

1899138 sabarimala - 2026
சபரிமலையில் ஆனி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது.

பிரசித்தி பெற்ற சபரிமலையில் ஆனி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று 15-ந்தேதி திறக்கப்பட்டு இன்று ஆனி மாதப்பிறப்பு முதல் பூஜைகள் துவங்கியது. பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக 15-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று 16-ந் தேதி காலை முதல் ஐயப்பனுக்கு அபிஷேகம் பூஜை வழிபாடு துவங்கியது.வரும்20-ந் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும். ஹரிவராஸனம் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img