spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மழை-நெல்லை தென்காசி அணைகளில் நீர் மட்டம் உயர்வு..

மழை-நெல்லை தென்காசி அணைகளில் நீர் மட்டம் உயர்வு..

- Advertisement -

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 60 அடியைத் தாண்டியது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வறண்ட நிலையில் இருந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அணைகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்ருகிறது. நிகழாண்டு கோடையில் நீர்மட்டம் 20 அடி வரை சென்ற பாபநாசம் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 60 அடியைக் தாண்டியது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 64.70 அடியாகவும் நீர்வரத்து 3141.20 கன அடியாகவும் நீர் வெளியேற்றம்: 454.75 கன அடியாகவும் இருந்தது.

156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 96.75 அடியாக இருந்தது.

118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 45.20 அடியாகவும் நீர்வரத்து 133.00 கன அடியாகவும் வெளியேற்றம் 50.00 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 85 அடி நீர் மட்டம் கொண்ட கடனாநதி அணையில் நீர்மட்டம் 54 அடியாகவும் நீர்வரத்து 219 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது. 84 அடி நீர்மட்டம் ராமநதி அணையில் நீர்மட்டம் 58 அடியாகவும் நீர்வரத்து 98 கன அடியாகவும் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 72.10 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 34.12 அடியாகவும் நீர்வரத்து 19 கனஅடியாகவும் நீர் வெளியேற்றம் 3 கனஅடியாகவும் இருந்தது. 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணையில் நீர்மட்டம் 36.10 அடியாகவும் நீர்வரத்து மற்றும் நீர்வெளியேற்றம் 67 கனஅடியாகவும் இருந்தது. 132 அடி நீர் மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 77 அடியாகவும் நீர்வரத்து 104 கனஅடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை .

மழையளவு (மி.மீட்டரில்)
திருநெல்வேலி மாவட்டம் : பாபநாசம் அணை 4, சேர்வலாறு அணை 7, பாளையங்கோட்டை 2, திருநெல்வேலி 1.4, சேரன்மகாதேவி 6, மாஞ்சோலை 6, காக்காச்சி 10, நாலுமுக்கு 18, ஊத்து 21.

தென்காசி மாவட்டம்:

தென்காசி 4, செங்கோட்டை 4.8, கடனாநதி அணை 10, ராமநதி அணை 7.2, கருப்பாநதி 2, குண்டாறு 19.4, அடவிநயினார் கோயில் அணை 40.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கிய நிலையில் அணைகளிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,174FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,897FollowersFollow
17,300SubscribersSubscribe