
விருதுநகரில் தனியார் கல்லூரியில் உள்ள நீச்சல்குளத்தில் இன்று மூழ்கி 9ம் வகுப்பு பயிலும் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் – தங்கமீனா தம்பதியினர் இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இன்று விடுமுறைநாள் என்பதால் இவர்ளின் 9ம் வகுப்பு பயிலும் அருண்குமார் என்ற மாணவர் இன்று தனியார் கல்லூரியில் உள்ள நீச்சல்குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்பொழுது அருண்குமார் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கியுள்ளான். இதனால் அந்த சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே கல்லூரி நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு.சென்றதாகவும் அங்கு முடியாத காரணத்தால் சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த மாணவன் இறப்பிற்கு காரணம் கல்லூரி நிர்வாகத்தின் மெத்தனப்போக்க காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர்