January 19, 2025, 9:53 AM
25.7 C
Chennai

காவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

சென்னை:  காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, இன்று மாலை கூடுகிறது தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இன்று மாலை 3.30 மணி அளவில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. மதியம் 1.10 மணி அளவில் தமிழக பட்ஜெட் உரை முடிந்ததும், சபாநாயகர் மீண்டும் 3.30 மணி அளவில் அவை கூடுவதாகக் குறிப்பிட்டார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அந்தத் தீர்ப்பின்படி 6 மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; தமிழகத்துக்கு 177.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் குறிப்பிட்டது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்காக,  ஒரு திட்ட அமைப்பு  உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

ALSO READ:  கும்பமேளா செல்ஃபி, அரசியலமைப்பு 75ம் ஆண்டு... மனதின் குரலில் பிரதமர் மோடி!

இதை அடுத்து, பட்ஜெட் விவாதம் நடைபெறுவதாக இருந்த நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அதிமுக., எம்.பி.க்கள் நடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று தமிழக அரசை கண்டித்து, கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக., உறுப்பினர்கள், இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை 3.30 மணி அளவில் சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை 10.30க்குத் தொடங்கிய பட்ஜெட் உரைக் கூட்டம், மதியம் 1.10 வரை நீடித்தது. சுமார் 2.30 மணி நேரத்துக்கு பட்ஜெட் உரையை நின்றபடி வாசித்தார் ஓ.பி.எஸ்.

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.