January 21, 2025, 3:07 AM
23.2 C
Chennai

சோ நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர்

சென்னை:

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நலமாக உள்ளதாக அவரது குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சுவாசக் கோளாறு காரணமாக அவ்வப்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் உடல் நலம் தேறி வீடு திரும்பி வந்தார் சோ.

கடந்த ஆகஸ்ட் மாதம்  பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போதும் சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் மோடி.

பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவும் சோவை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.

இந்நிலையில் ஓரளவு உடல் நலம் தேறி வீடு திரும்பிய சோ ராமசாமிக்கு மீண்டும் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து,  நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.  இந்நிலையில் சோ நலமாக உள்ளார் என்றும், அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் குடும்ப மருத்துவர் விஜய சங்கர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...