January 25, 2025, 3:23 PM
29 C
Chennai

சோ குறித்த செய்தி: ஆயிரம் முறை மன்னிப்பு கேட்ட குஷ்பு

பத்திரிகையாளர் சோ ராமசாமி குறித்த தவறான தகவலை வெளியிட்டதற்காக நடிகை குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
 
பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சோ ராமசாமி குறித்து வதந்திகள் பரவின. இந்தத் தகவலை உறுதி செய்யாமல், நடிகை குஷ்புவும் வருத்தம் தெரிவித்து தகவல் வெளியிட்டார்.  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சோ ராமசாமி குறித்துக் கூறி, இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால், பின்னூட்டம் அளித்த பலரும் சோ நலமாக உள்ளார் என  ரீ- டுவீட் செய்தனர்.
 
தனது செயலுக்காக குஷ்பு தற்போது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ”சோ ராமசாமி குறித்த ஒரு பதிவை போட்டிருந்தேன். அதை நான் உறுதிப் படுத்தாமல் செய்துவிட்டேன். என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  ‘ரெட் ஜெயண்ட்’ படத்தை வெளியிட்ட திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு!

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.