ஐபிஎல் டி20 லீக் போட்டியில் நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப்பின் துவக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 60 பந்தில் 94 ரன் அடித்தார்.
போட்டி முடிந்த நிலையில், ராகுலிடம் வந்த மும்பை இந்தியன்சின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வாழ்த்து தெரிவித்து, இருவரும் ஒருவருக்கொருவர் ஜெர்சி மாற்றிக் கொண்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் பொதுவாக ஜெர்சி மாற்றிக் கொள்வது கால்பந்து விளையாட்டுகளில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரம். இதை கிரிக்கெட்டுக்கும் கொண்டு வருவதில் மகிழ்ச்சி கூறியுள்ளார்.