Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img
spot_img

― Advertisement ―

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது

வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது

- Advertisement -
- Advertisement -

வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. கடந்த 22-ந்தேதி தவழ்ந்த கண்ணன் பல்லக்கு நிகழ்ச்சியும், மாலையில் ராமர் திருக்கோலம் அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தது.

தொடர்ந்து 24-ந்தேதி கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் சுகுமாறன், தீப்பாய்ந்தான், அரசு செயலர் சுந்தரவடிவேலு, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் ஆகியோர் முன்னிலையில் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து ஜூலை 1-ம் தேதி வரை ஊஞ்சல் உற்சவமும், 2-ம்தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
85FollowersFollow
0FollowersFollow
4,792FollowersFollow
17,300SubscribersSubscribe
Exit mobile version