More
    Homeசற்றுமுன்கோவையில் 18-ஆவது வேளாண் கண்காட்சி: இன்று முதல் 16 வரை நடைபெறுகிறது

    To Read in other Indian Languages…

    கோவையில் 18-ஆவது வேளாண் கண்காட்சி: இன்று முதல் 16 வரை நடைபெறுகிறது

    இந்தியாவின் மிகப் பெரிய வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸ் 2018, கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    கண்காட்சி குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி, கண்காட்சியின் தலைவர் ஆர்.செளந்தரராஜன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
    18-ஆவது முறையாக நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு, வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை, விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், வேளாண் இயந்திர உற்பத்தியாளர் சங்கம், நபார்டு உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.

    இந்த ஆண்டு கண்காட்சி, விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இதில், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, ஸ்வீடன், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், மத்தியபிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களும் கலந்து கொள்கின்றன.

    சுமார் 2.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 450 நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைக்கின்றன. கண்காட்சியில், சூரிய ஒளி பம்புகள், நுண் நீர்ப் பாசனம், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், மண்ணில்லா விவசாயம், தானியங்கி முறைகள், மதிப்புக் கூட்டுப் பொருள்கள், அறுவடை பின் தொழில்நுட்பம், வேளாண் சந்தை, கால்நடை வளர்ப்பு, மீன், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட உள்ளது.

    மேலும் கண்காட்சி அரங்கில் வரும் 14-ஆம் தேதி பால்வளத் துறை குறித்த கருத்தரங்கும், 16-ஆம் தேதி பயோ நியூட்ரிசன் பார்மிங் கருத்தரங்கும் நடைபெறுகிறது. மேலும், வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வேலிகள், எடைக் கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. இந்தக் கண்காட்சியில் சுமார் 1.50 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும், நாடு முழுவதிலும் இருந்து வேளாண் நிபுணர்கள், உணவு பதப்படுத்தும் தொழில் துறையினர், இடுபொருள், விதை உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், வங்கியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    16 − ten =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,631FollowersFollow
    17,300SubscribersSubscribe

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...

    Exit mobile version