கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவரும், உலகின் தலை சிறந்த வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், 100 மில்லியன் பவுண்டுக்காக யுவான்தாஸ் அணிக்கு மாறியுள்ளார்.
இதனால் கவலை அடைந்துள்ள ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் தலைவரான ரமோன் கால்டெரோன், ரியல் மாட்ரிட் மிகபெரிய தவறு செய்துள்ளது. உலகின் சிறந்த வீரரான ரொனால்டோவை யுவாண்டாஸ் அணிக்கு விற்றது வரலாற்று பிழையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.